47 : காதலிக்கு!
4:05 PM | Author: நாமக்கல் சிபி

அன்பே!
உனக்காக
தாஜ்மஹால்
கட்ட முடிகிறதோ இல்லையோ!
உன் கழுத்தில்
நிச்சயமாய்
தாலி கட்ட
முடியும் என்னால்!
This entry was posted on 4:05 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

15 பின்னூட்டங்கள்:

On Sun Feb 11, 04:12:00 PM , அனுசுயா said...

இல்லாத கொடுமைக்கு இப்டியெல்லாம் சொல்லி தேத்திக்க வேண்டியதுதான் :))))

 
On Sun Feb 11, 04:21:00 PM , Anonymous said...

ஹி ஹி ஹி சிரிச்சு டமி வலி தாங்கல...சும்ம சொல்ல கூடாது சுவாரசியமா தான் எழுதுறிங்க...

 
On Sun Feb 11, 04:23:00 PM , நாமக்கல் சிபி said...

//இல்லாத கொடுமைக்கு இப்டியெல்லாம் சொல்லி தேத்திக்க வேண்டியதுதான் //

வாங்க அனுசுயா! வேற என்ன பண்ண முடியும்!

 
On Sun Feb 11, 04:24:00 PM , நாமக்கல் சிபி said...

//ஹி ஹி ஹி சிரிச்சு டமி வலி தாங்கல...சும்ம சொல்ல கூடாது சுவாரசியமா தான் எழுதுறிங்க//

தூயா! மிக்க நன்றி!

 
On Sun Feb 11, 04:26:00 PM , Anonymous said...

அந்த cupid உங்களை காணல போல இருக்கே...

 
On Sun Feb 11, 04:38:00 PM , நாமக்கல் சிபி said...

//அந்த cupid உங்களை காணல போல இருக்கே...
//

புரியலைங்களே தூயா!

 
On Sun Feb 11, 07:11:00 PM , பொன்ஸ்~~Poorna said...

//தஜ்மஹால்// -- கட்டுறதுக்கு முன்னாடியே காலை ஒடச்சிட்டீங்க :)

 
On Mon Feb 12, 09:36:00 AM , நவீன் ப்ரகாஷ் said...

சிபி உங்க கவிதை ( ?! ) அருமை !! :))))))))) உங்க கலாய்த்தலுக்கு அளவே இல்லாம போய்டுச்சு போல !! :))))))நல்லா சிரிச்சேன் !

 
On Mon Feb 12, 10:17:00 AM , ஆதிபகவன் said...

//உன் கழுத்தில்
நிச்சயமாய்
தாலி கட்ட
முடியும் என்னால்!//

என்ன சிபி நிலைமை அந்தளவு மோசமா போயிடுச்சா? :)

 
On Mon Feb 12, 12:25:00 PM , லக்ஷ்மி said...

சிபி, அந்த சோதனை பதிவை தூக்கீட்டேன். பிரச்சனை என்னன்னா, பின்னூட்டம் போட்டால் தமிழ்மணத்தில் சமீபத்தில் பின்னூட்டம் பெற்றவை பட்டியலில் வர மாட்டேங்குது.அதைத்தான் நோண்டிக்கொண்டிருந்தேன். அந்த சோதனையில் உங்கள் பொறுமையையும் சேர்த்து சோதித்ததுக்கு மன்னிக்கவும். ஞாயிறு மதியம்ன்றதால யாரும் அங்க சுத்துவாங்கன்னு நான் எதிர்பார்க்கலை. இன்னொரு கொசுறு செய்தி, இன்னமும் அது சரியாகலை. So , சோதனை முயற்சிகள் தொடரும்.

 
On Wed Feb 14, 06:33:00 AM , நாகராஜ் said...

சிபி நாமெல்லாம் இந்த காலத்துல தாஜ்மகால் கட்டமுடியாதுங்ணா!!!

ஏதோ சிங்கநல்லூர் பக்கம் அஞ்சரை கிரவுண்ட் நிலமோ இல்லை நஞ்சுண்டா புரத்தில் அந்த பார்சன் அபார்மெண்ட்டில் ஒரு வீடோ இருந்தா போதும். இப்போவே உங்களுக்கு பொன்ணு தர பொள்ளாச்சி, பல்லடம் பக்கம் ஆளுக நிறையா இருக்காங்க தலைவரே

குமரன்@முத்தமிழ்மன்றம்.கொம்

 
On Wed Feb 14, 10:45:00 AM , நாமக்கல் சிபி said...

வாங்க ஆதிபகவன்!

//என்ன சிபி நிலைமை அந்தளவு மோசமா போயிடுச்சா? :)
//

தாலி கட்டுறது என்னங்க மோசமான நிலைமை?

 
On Wed Feb 14, 10:46:00 AM , நாமக்கல் சிபி said...

// அந்த சோதனையில் உங்கள் பொறுமையையும் சேர்த்து சோதித்ததுக்கு மன்னிக்கவும்//

அட! அங்கே வந்து சும்மா கலாய்ச்சேன்! அவ்வளவுதான்!

சோதனைப் பதிவுகள் போடுறதெல்லாம் சகஜம்தான்!
:))

விட்டுத் தள்ளுங்க!

 
On Wed Feb 14, 10:47:00 AM , நாமக்கல் சிபி said...

// இப்போவே உங்களுக்கு பொன்ணு தர பொள்ளாச்சி, பல்லடம் பக்கம் ஆளுக நிறையா இருக்காங்க தலைவரே//

வாங்க முத்தமிழ்க் குமரன்,

ஏதோ எனக்கு முதுகுல டின் கட்ட வைக்க ஏற்பாடு செய்யுறாப்புல தெரியுதே!

 
On Wed Feb 14, 10:51:00 AM , நாமக்கல் சிபி said...

//சிபி உங்க கவிதை ( ?! ) அருமை !! :))))))))) உங்க கலாய்த்தலுக்கு அளவே இல்லாம போய்டுச்சு போல !! :))))))நல்லா சிரிச்சேன் !
//

//கவிதை ( ?! ) //

ம் புரிகிறது நவீன் பிரகாஷ்!

நல்லா சிரிச்சீங்களா! அது போதும்!

மிக்க நன்றி!