தமிழ்மண வாசகர்கள் என்ன இளிச்ச வாயர்களா?, பின்ன என்னங்க ஆளாளுக்கு ஒரு போஸ்ட் போடுவாங்களாம்! தமிழ்மணம், தமிழிஷ் னு இருக்குற எல்லா திரட்டியிலும் லிங்க் கொடுத்துடுவாங்களாம்/அனுப்பிடுவாங்களாம்! படிக்குறவங்க மாங்கு மாங்குன்னு பின்னூட்டம் போட்டுட்டு மறுக்கா ஓட்டு வேற குத்துவாங்களாம்!

சண்டை மட்டும் பப்ளிக்கா நடக்குமாம்! அப்பாலிககா இவங்களுக்குள்ளே தனிமடல்/தொலைபேசி ன்னு ரகசியமா பேச்சு வார்த்தை நடத்துவாங்கலாம்! அப்புறம் எல்லா போஸ்டையும் தூக்கிடுவாங்களாம்!

இல்லை தெரியாமத்தான் கேக்குறேன்! படிக்குறவங்க என்ன வேலை வெட்டி இல்லாம காது குடைஞ்சிகிட்டு உக்காந்து இருக்கோம்னு நினைச்சிகிட்டிருக்கீங்களா! எங்களுக்கு ஆயிரத்தெட்டு மொக்கை வேலையெல்லாம் விட்டுபுட்டு அங்கயும், இங்கயுமா லிங்கை தேடி தேடி படிச்சி பின்னூட்டம் போட்டுகிட்டு அதுக்கெல்லாம் என்ன பதில் வந்துதுன்னு படிக்க காத்துகிட்டிருப்போம்!

ஒரே நிமிஷத்துல எல்லா போஸ்டையும் தூக்கிடுவீங்க! சரி தூக்குறதுதான் தூக்குறீங்க! தமிழ்மணத்துக்கு ஒரு மெயில் அனுப்பி அங்க லிஸ்ட் பண்ணுறதையும் தூக்கச் சொல்லலாம்ல! அவங்கவங்க பிளாக்லலருந்து தூக்கிட்டா போதுமா?


அட்லீஸ்ட்! இந்த பதிவு ஒருவேளை நீக்கம் செய்யப்படவும் வாய்ப்பிருக்கிறதுன்னு ஒரு பின் குறிப்பாவது போடலாம்! மண்ணைய பிச்சிகிட்டு பின்னூட்டம் போடுறவங்களாவது எப்படியாச்சும் தூக்கத்தான போறாங்க! எதுக்கு மெனக்கெட்டு புன்னூட்டம்லாம் போட்டுகிட்டுன்னு பேசாமயாவது இருப்பாங்கல்ல!

நீக்குன பதிவுகளை திரட்டிகளும் தொடர்ந்து பட்டியல்ல காட்டிகிட்டு இருக்கு!
புதுசா வரவங்களும் அதை கிளிக் பண்ணி பார்த்தா அங்க அந்த பதிவே இல்லைன்னு எரர் மெசேஜ் வேற வரும்! இப்படியே தினமும் ரெண்டு போஸ்ட் பார்த்தா படிக்கிறவங்களுக்கு தமிழ்மணத்துல எதை கிளிக் பண்ணினா கண்டிப்பா நீக்கப்படாத போஸ்ட் இருக்கும்னு குழப்பம் வராது? இதன்மூலமா திரட்டிகள் மேல இருக்குற நம்பகத்தன்மைக்கும் ஆப்பு வெச்ச மாதிரில்ல ஆகுது?


இப்ப சீரியஸ்(!?) மெசேஜ்

போட்ட அரை மணி நேரத்துல நீக்கிடலாம்னு தோணுதே! அந்த பாழாப்போன போஸ்டை பப்ளிஷ் பண்ணுறதுக்கு முன்னாடி ஒரு அஞ்சு நிமிஷம் யோசிக்கலாம்ல! அட! அந்த பதிவுல போடுற விஷயத்தை சம்மந்தப்பட்ட ஆளுங்களுக்கு மட்டும் தனிமடல் அனுப்பி சண்டையெல்லாம் போட்டு கடைசியில சுமுகமா முடிச்சிக்கலாம்ல!

பப்ளிக்கா பல பதிவுகளை போட்டு ஏன் எல்லாரையும் எரிச்சலூட்டுறீங்க! அல்லது திரட்டிகளுக்காவது அனுப்பாம இருங்க! புண்ணியமா போகும்!

பல்வேறு ஊடகங்கள் இப்பதான் தமிழ் வலைப்பதிவுகளை தொடர்ந்து பார்த்துகிட்டு இருக்காங்க! அவங்க முன்னாடி நம்மை நாமே தரம் தாழ்த்திக்கலாமா? கொஞ்சம் யோசிச்சி சொல்லுங்க!

பின்குறிப்பு:

இந்த பதிவை எக்காரணம் கொண்டும் நீக்க மாட்டேன் என்ற உறுதிமொழியுடன் தமிழ்மணம் கருவிப்பட்டையிலிருக்கும் அனுப்பு பொத்தானை அழுத்துகிறேன்!

------------------------------------------------------------------------------------------------

பிடிச்சிருந்தா : பாஸிடிவ் குத்து
பிடிக்கலைன்னா: கும்மாங்குத்து
இக்கலாய்ப்புக்கு தொடர்பான எதிர் கலாய்ப்புகள்
லக்கிலுக் (எ) யுவகிருஷ்ணா "உங்களில் யார் அடுத்த நயன்தாரா?" ன்னு போஸ்ட் போட்டார்!

நம்ம வகுப்பறை வாத்தியார் "உங்களில் யார் அடுத்த யுவ கிருஷ்ணா?" ன்னு ஒரு பதிவைப் போட்டுட்டார்!

உடனே நான் "உங்களில் யார் அடுத்த வகுப்பறை வாத்தியார்?"னு ஒரு போஸ்டைப் போட்டு கண்டினியூ பண்ணுவேன்னு தானே நினைக்கிறீங்க!

பிச்சிப்பிடுவேன் பிச்சி! இப்படியே போனா இதையே ஒரு தொடராக்கிடுவீங்க போல கீதே! இதுக்கு மேல யாராச்சும் இதை கண்டினியூ பண்ணினீங்ககாட்டி வெக்குக்குங்க! அப்புறம் மெர்சலாயிடுவீங்க! ஒரே பேஜாரா பூடும்! ஷுகுரா சொல்லிட்டேன்! அக்காங்க்!
இக்கலாய்ப்புக்கு தொடர்பான எதிர் கலாய்ப்புகள்
லொள்ளு சபா : காக்கா காக்கா
1:57 PM | Author: நாமக்கல் சிபி
நான் பார்த்துட்டு கண்ணுல தண்ணி வர சிரிச்சிகிட்டிருக்கேன்! நீங்களும் பாருங்க! முழுப் படமும் கிடைக்கலை!


பார்ட் 1
-------



பார்ட் 2
-------



"செட்டுகிட்டே நகை நட்டுனு ஏதாச்சும் வெச்சி பணம் கேட்டா கொடுப்பான். சும்மா கொடுப்பானா"

"அரே! கடலூர்க்கு போன் போட்டுட்டு பாண்டியான்னு கேக்குறே!"
இக்கலாய்ப்புக்கு தொடர்பான எதிர் கலாய்ப்புகள்


மும்பையிலிருந்து திரும்பி வரும் இளைஞன்/குழந்தை பாலபாரதி! 20 வருடத்தைக் குறைத்து இளமையாகக் காட்ட படாத பாடு பட்டு ஒப்பனையின் மூலம் 40 வயது இளைஞராக்கி இருக்கிறார்கள்.

இவர் சென்னை வந்தவுடன் தானும் கொலைப் பதிவர் சந்திப்புகளை திட்டமிட்டு பக்காவாக நடத்த வேண்டும். அதில் பிளாக்கர்கள், அதர் ஆப்ஷன்கள், அனானிகள் அனைவரும் பாகுபாடின்றி கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்கிறார். ஆனால் ஏற்கனவே இதைத் தொழிலாகச் செய்துவரும் பிரபலமானவருடன் இவருக்கு மோதல் ஏற்படுகிறது. பின்னர் சோதனைகளைக் கடந்து எப்படி இவர் கொலைப் பதிவர் சந்திப்புகளை வெற்றிகரமாக நடத்துகிறார் என்பது கிளைமாக்ஸ்.

இது ஏ.வி.எம் தயாரிப்பு அல்ல. பா.க.ச தயாரிப்பு


நன்றி :
பாலபாரதிக்கு ஒப்பனை (கிராஃபிக்ஸ்) : கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்

ஹைலைட் காட்சிகள் :





ஒரு கொலைப் பதிவர் : "மீட்டிங்க் வந்தா எத்தனை போண்டா தருவீங்க?"

பால பாரதி : "திரும்பவும் அதே கேள்வி!, எத்தனை தடவைடா இதையே கேப்பீங்க?"

வரவணையான் : "மச்சான், இங்கே போண்டா இல்லாம மீட்டிங்கெல்லாம் நடத்த முடியாது, ஊரோட ஒத்துப் போறதுதான் நல்லது. எப்படியோ மீட்டிங்க் நடக்கணும்"

--------------------------------------------------------------------------
பால பாரதி : "கடவுளே! ஏன்யா என்னை கெட்டவனா படைச்சே?"

அசரரீ : "நல்லவனா படைச்சா கெட்டுப் போயிடுவேன்னுதான். - பா.க.ச, தேவலோகம் கிளை"

பால பாரதி : "அடப் பாவிகளா, அங்கயுமாடா! :( "
------------------------------------------------------------------------------
பால பாரதி : " என் லேப் டாப்புலயும் லினக்ஸ் சுசீ இன்ஸ்டால் பண்ணிக் குடுங்க"

மா.சிவகுமார் : "முன்ன பின்ன தெரியாத ஆளுகளுக்கெல்லாம் இன்ஸ்டால் பண்னிக் குடுக்க முடியாது"

பால பாரதி : "முன்ன பின்னதான இப்போ பார்த்துக்குங்க"

பால பாரதியும், வரவணணயானும் டக் டக் என்று முன் பின்னாகத் திரும்பி

"இது முன்ன, இது பின்னே" என்று கோரஸாகச் சொல்கின்றனர்.

மா.சிவகுமார் தலையில் அடித்துக் கொள்கிறார்.
------------------------------------------------------------------------------
அருள் குமார் : "அட! சுசீ இல்லாட்டி என்னங்க பால பாரதி? என்கிட்ட ரெண்டு ஓ.எஸ் இருக்கு
ஒண்ணு உபுண்டு, இன்னொன்னு தபுண்டு, உங்க லேப்டாப்ல இன்ஸ்டால் பண்ணி நல்லா பழகிப் பாருங்க, பிடிச்சா அதையே யூஸ் பண்ணுங்க, இல்லாட்டி விண்டோஸ் 2000 போட்டுடலாம்"
-----------------------------------------------------------------------------
டோண்டு : "யேய் யேய்... இவன் பால பாரதியேதான்.. எப்படி எப்படி....? "

சிபி : " சார்.. என்ன சார் இது! பாலபாரதியைத்தான் நாம கொன்னுட்டமே! இவன் வேற ஆளு சார், பால பாரதி பிரண்டாம்"

பி.பி.ரதி : "என் பேரு பி.பி.ரதி, சும்மா பேரைக் கேட்டாலே அதிருதில்ல"
--------------------------------------------------------------------------
மா.சிவகுமார் : "பழக்கம் ஆகணுங்குறதுக்காக தெனமும் பொழுது போயி பொழுது விடிஞ்சா எங்க ஆஃபீஸ் வாசல்ல வந்து நிக்குறது கொஞ்சம் கூட நல்லா இல்லை! சொல்லிட்டேன்!"
----------------------------------------------------------------------------
பால பாரதி : "தோ பாருங்க, போண்டா இல்லாம மீட்டிங்குக்கு வர விருப்பம் இருக்குவங்க எல்லாம் இப்படி வாங்க, மீதி பேரெல்லாம் அதோ அங்கன இருக்குற ஆஃபீஸ் ரூமுல போய் வெயிட் பண்ணுங்க"

உடனே பாலபாரதி கண் சிமிட்டும் நேரத்தில் அங்கிருந்த அனைவரும் காணாமல் போய்விடுகின்றனர்.

வரவணையான் : "தலை! எக்குத் தப்பா இப்படியெல்லாம் சொல்லாதீங்க. இப்ப பாருங்க! எல்லாரும் அந்த ஆஃபீஸ் ரூமுலதான் போண்டா தருவாங்கன்னு பறந்துட்டாங்க! இப்போ அவ்ளோ போண்டாவுக்கு என்ன பண்ணப் போறீங்க? இல்லாட்டி உங்களை குமுறீடப் போறாங்க"
-----------------------------------------------------------------------------
ஆர்.எஸ்.புரம், கோயமுத்தூர், கோவை மாவட்டம்

ஓசை செல்லா : "பால பாரதி, இது உங்க ஊரு மாதிரி, நீங்க எப்படி எப்படி மீட்டிங் நடத்தணும்னு ஆசைப் படுறீங்களோ, அப்படியேல்லாம் நடத்துங்க. "
(யப்பா, இப்படியா ஆப்பு வெப்பாங்க.. அடி பின்னீட்டானுவலே")
-----------------------------------------------------------------------------
வீ.த.பீப்பிள் ஜெய்: தோ பாருங்க சி.பி.ஐ ஆபீசர். நாங்க இனிமே அவரை கலாய்க்க முடியாம போயிடும்ணு சொன்னதாலதான் நான் அவரோட பிளாக் யூரலை உங்ககிட்டே தரேன். எக்காரனம் கொண்டும் நாங்க அவரைக் கலாக்குறதுக்கு ஆபத்து வந்துடக் கூடாது. அதுக்கு முதல்ல சத்தியம் பண்ணிக் குடுங்க.
---------------------------------------------------------------------------------
சி.பி.ஐ ஆபீசர்: "எப்படிய்யா பாலபாரதியோட பிளாக்கை ஓப்பன் பண்ணுறது. பாஸ்வோர்ட் தெரியனுமே"

உதவி ஆபீசர் : "அட பாஸ்வோர்ட் தெரியணும் அவ்வளவுதானே! இப்ப பாருங்க"
என்று சொல்லிவிட்டு தனது மொபைல் ஃபோனை எடுத்து பாலபாரதியின் நம்பரை டயல் செய்கிறார் .

உதவி ஆபீசர் : "ஹலோ பாரதிங்களா, வணக்கம் தலை"

பால பாரதி : "வணக்கம். வணக்கம் தலை. சொல்லுங்க யாரு பேசுறது"

உதவி ஆபீசர் : "நான் ஒரு புது பிளாக்கர் தலை. பிளாக்ல ஒரு சந்தேகம். எல்லாரும் உங்ககிட்ட கேட்டா உதவி பண்ணுவீங்கன்னு சொன்னாங்க. அதான் உங்களுக்கு அடிச்சேன்"

பால பாரதி : "சந்தேகமா, ரொம்ப சந்தோஷம். எது வேணும்னாலும் கேளுங்க, நம்மால முடிஞ்சத சொல்றேன் தல"

உதவி ஆபீசர் : "அது ஒண்ணும் இல்ல தலை, ஹெச்.டி.எம்.எல்ல கொஞ்சம் டவுட்டு, உங்க பிளாக் டெம்பிளேட் ஓப்பண் பண்ணி பார்த்து, அதுல லிங்க் எப்படி கொடுக்குறதுன்னு பார்த்து தெரிஞ்சிக்கிட்டேன்னா அவ்வளவுதான். உங்க பிளாக் பாஸ்வோர்ட் கொஞ்சம் சொல்லுங்க தலை"

பால பாரதி : "இவ்ளோதானா தலை, தாரளாமா சொல்றேன், எழுதிக்குங்க ******, இதான் தலை"

உதவி ஆபீசர் : "ரொம்ப தேங்க்ஸ் தலை, நான் அப்புறமா பேசுறேன்"

பால பாரதி : "ஓகே தலை, ஓகே தலை, எப்ப டவுட்னாலும் என்னைக் கூப்பிடுங்க பை"
இக்கலாய்ப்புக்கு தொடர்பான எதிர் கலாய்ப்புகள்
போட்டிகள் : ஒரு சிறப்புப் போட்டி
1:35 PM | Author: நாமக்கல் சிபி
இந்த வருஷம் ஆரம்பிச்சதிலேர்ந்தே ஒரே போட்டி மயமா இருக்கு! தினம் தினம் தமிழ்மணத்தைத் திறந்தா போட்டி என்ற வார்த்தை முகப்புப் பக்கத்துல ஒரு இடத்துலயாவது இல்லாம இருக்கிறதே இல்லை! அந்த அளவுக்குப் போட்டிகள்!

பிளாக்குட் போட்டி, உரையாடல் போட்டி, இப்ப ரீசண்டா வந்திருக்குற உயிரோடை போட்டி, etc.etc..

போட்டிக்கு எழுதுற கதைகளைப் படிச்சி முடிக்கவே நமக்கு தாவு தீருது! இதுல நாம வேற எந்தப் போட்டில கலந்துக்குறது, எதை விடுறது தவிச்சிப் போயி கிடக்குற என்னை மாதிரி சுறுசுறுப்பான(!?) பதிவர்களுக்காக (மட்டுமே) இந்த சிறப்புப் போட்டி!

உங்க மூளையைக் கசக்க வேண்டாம், ரூம் போட்டு யோசிக்க வேண்டாம்.
இந்த போட்டியின் ஸ்பெஷாலிட்டியே ரொம்ப சிம்பிளா எண்ட்ரி கொடுக்க வேண்டியதுதான்!
நடுவர்களுக்கும் அத்தனை கஷ்டமான வேலை இல்லை! படிச்சி விமர்சனமெல்லாம் எழுதி, திருத்தி மார்க் போட்ட வேண்டியதில்லை!
(பாவம்! நீங்களும் எத்தனை கதைதான் படிச்சி தாவு தீருவீங்க...)

இந்த போட்டியைப் பத்தி:

ஒண்னுமில்லைங்க! இந்தப் போட்டியில கலந்துக்காம இருக்கணும்! அதான் போட்டியே!

.
.
.
.
.
.
.
என்னாது பரிசு என்னவா? கொமட்டுலயே குத்திப்புடுவேன் குத்தி..!

-------------------------------------------------------------------------------------

(ஐயா திரட்டிகளே, போட்டி நடத்தும் நிர்வாகிகளே...! ஐபிஎல், ஐசிசி, டெஸ்ட் மேட்ச், ஒன் டே, 20/20 எல்லாம் ஒரே நேரத்துல வெச்சா எப்படி பிளேயர்ஸ் களைச்சி போயிடுவாங்களோ அதே மாதிரி

எக்கச் சக்க போட்டிகள்(குறிப்பா சிறுகதைகளுக்கு மட்டுமே நிறைய), அதுவுமிலலாம ஏகப்பட்ட தொடர்கள்(டெஸ்ட் மேட்ச்)?

பதிவர்களைப் பார்த்தா பாவமா இல்லையா உங்களுக்கு?
இக்கலாய்ப்புக்கு தொடர்பான எதிர் கலாய்ப்புகள்
ஓ! எதிரியே எதிரியே
9:38 AM | Author: நாமக்கல் சிபி
நாய் 'களோடு
ஒரு
நரி
தெருவிலும்
சாலையிலும்

காதைத் துளைக்கும்...
குரைப்புச் சத்தம்
கேட்கிறது...

நாய்'களுக்கு
குரைப்பது
பழக்கமே....
நரிக்குமா?

எப்போது
புரியும்
இந்த
நரிக்கு
அது
குரைத்துக்கொண்டிருக்கிறது
என்பது....??????

நாய்களோடு
நரியைப்
பார்க்க..........
சகிக்கவில்லைதான்....
என்ன செய்வது...
நரி
வெளியில்
வரும்
நாளை
நோக்கி........

மூலப் பதிவு : ஓ நண்பனே நண்பனே

எதிர் பாட்டு :
இக்கலாய்ப்புக்கு தொடர்பான எதிர் கலாய்ப்புகள்
யாருக்காகவோ
9:47 AM | Author: நாமக்கல் சிபி
எனக்காக கொட்டிக்கொண்ட
நாட்கள் சென்று

யாருக்காகவோ
கொட்டிக்கொள்ள வந்தேன்

யாருக்காகவோ
கொட்டிக்கொள்வதை
நிறுத்தினேன்..

எனக்காக
எப்போதாவது
கொட்டிக்கொண்ட
பொழுதுகள்

சாம்பார்
இல்லாத
சாப்பாடுகளாயின...

இருப்பினும்
பார்சலில்
வரும்
அன்பான
ஃபுல் மீல்ஸ்கள்

"உனக்காக நீ கொட்டிக்கொள்ளாதே"

இது
சாப்பாடு
இது சாம்பார்
இது
கூட்டு
இது பொறியல்
என்று
சொல்ல

எனக்கு
யாரும்
இருந்ததில்லை

சொல்லுபவர்
அத்தனை
பேரும்
சாப்பாட்டு இராமன்கள்!!

விழுங்கியது
ஜீரணிக்கும் - மறுநாள்
காலையில் வெளியில் வரும்
மறந்தும் போவேன்..

மீண்டும்
ஆரம்பிப்பேன்..

மீண்டும்
முடிப்பேன்...

யாருக்காகவோ....
.
.
,
.
எனக்காக நான்
ஏப்பம் விட்டதில்லை
என்பதில்
மட்டும்
வில்லுக்கும்
தெளிவு....

- எதிர்கவுஜ ஏழுமலை

மூலக் கவுஜை : இவங்களோட பார்வையில்

(அவங்க பதிவை கவுஜை என்று இராம் சொன்னதால் மட்டுமே எதிர் கவுஜை எழுத வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டேன்)
இக்கலாய்ப்புக்கு தொடர்பான எதிர் கலாய்ப்புகள்
நாங்களும் எழுதுவம்ல சிறுகதை
12:15 PM | Author: நாமக்கல் சிபி
கதை











[போட்டிக்கு அல்ல]
இக்கலாய்ப்புக்கு தொடர்பான எதிர் கலாய்ப்புகள்
பார்வைகள் பதிவுலே கவிதாக்கா பலபேர்கிட்டே அவங்கவங்களுக்கு பிடிச்ச ஸ்வீட் பேர் கேட்டதாகவும் எல்லாரும் அவங்களை அழவைச்சதாகவும் எழுதி இருக்காங்க!

உண்மையில என்ன நடந்ததுன்னு நீங்களே பாருங்க!

--------------
Daar All
Plz send me your favorite "sweet" item name. (example laddu, halwa, pasanthi..etc)
Kavi
----------------
பால்கோவா

நட்புடன்,

நாமக்கல் சிபி.
----------------
சிபி நன்றி
இன்னொரு பிடித்த ஸ்வீட் சொல்லுங்க.. அல்ரெடிஓருத்தங்க இதை சொல்லிட்டாங்களே...
---------------------
நானே செஞ்ச பால்கோவா!

(இதை யாரும் கண்டிப்பா சொல்லி இருக்க முடியாது)
நட்புடன்,

நாமக்கல் சிபி.
----------------------
பிச்சிப்புடுவேன் பிச்சி.. :)))))))))))
ப்ளீஸ்ப்பா. .எனக்கு வேற உங்களுக்கு பிடிச்ச ஸ்வீட் பேரு சொல்லுங்க...
-----------------------
பிச்சிப் போடுவதற்கு அதென்ன ஜிலேபியா?
யாருக்கு பிடிச்ச ஸ்வீட் சொல்லணும்? எனக்கு பிடிச்சது பால்கோவாதான்!

நட்புடன்,

நாமக்கல் சிபி.
--------------------------
ஹய்யோ..
சரி பால்கோவா தவிர வேறு என்ன ஸ்வீட் பிடிக்கும்...
சொல்லிடுங்களேன்..
--------------------------
எனக்கு காரா பூந்தி பிடிக்கும்!

நட்புடன்,

நாமக்கல் சிபி.
--------------------
பிசாசே... காராபூந்தி.. காரம். .நான் கேட்டது ஸ்வீட்டூஊஊஊஊஊஊ
oru purpose kaha ketta.. sollanum.. solungapa... enn eppadi oyira vaangareenga ??? avvvvvvvvvvvvv !!
--------------------
ம்ஹூம்!
எனக்கு பால்கோவாதான் பிடிக்கும்!
இன்னொருத்தரும் சொல்லிட்டாங்க என்பதற்காக நான் மாத்திக்க முடியுமா என்ன?
.வேணும்னா சோன் பப்படின்னு எழுதிக்குங்க! (லுலுங்காட்டிக்காகத்தான், நிஜமா எனக்கு பால்கோவா தான் பிடிக்கும்)

நட்புடன்,

நாமக்கல் சிபி.
-----------------------------------
sari... :)))))))))) thanks.. eppa avanga kitta mathikka solli kettu paarkirean..
avanga enna solla poraangalo ponga..



இக்கலாய்ப்புக்கு தொடர்பான எதிர் கலாய்ப்புகள்
பா.க.ச
புரடக்ஸன்ஸ்
பெருமையுடன் வழங்கும்
பதிவுலக கலாய்த்தல் ஸ்டார்(!?)
பாலபாரதி
இன்
பா(ட்)சா
(பால சாரதி)
இது ஒரு சிரிப்பு சரித்திரம்
----------------------------------------------------------------------------------------------------------
"அட என்னங்க இது! ஒரு மணி நேரத்துல 10 போஸ்ட் எழுதித் தந்துடுவேன்னு சொன்னீங்க! இன்னமும் ஆரம்பிக்கவே இல்லை! விடுங்க நான் வேற யார்கிட்டயாவது கொடுத்து எழுதிக்கிறேன்!"
"சார்! ப்ளீஸ் ஒரு அஞ்சு நிமிஷம் பொறுங்க! ஃபாண்ட் பிராப்ளம்தான்! சரி ஆனதும் எப்படியாவது முடிச்சி கொடுத்துடுறேன்" என்று சமாதானப் படுத்தி விட்டு கைகளைப் பிசைந்து கொள்கிறார்.
அப்போது அவரை நோக்கி மூச்சிரைக்க ஓடிவரும் வீதபீப்பிள் ஜெய்!
"யப்பா! இந்தா சிடி! இதுலே இ-கலப்பை இருக்கு! சீக்கிரம் இன்ஸ்டால் பண்ணி பதிவெழுத ஆரம்பி" என்று சொல்ல,
அந்தப் பதிவரோ ரொம்பவும் நெகிழ்ந்து போய் "அண்ணே! நல்ல நேரத்துல வந்தீங்க! எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை" என்று தழுதழுக்கிறார்.
"அட! நன்றியெல்லாம் எனக்கெதுக்கு! எல்லாம் பாலபாரதி அண்ணனுக்கு சொல்லுங்க அப்படியே மறக்காம பா.க.ச போஸ்ட் ரெண்டு எழுதிடுங்க" என்று கூறி விட்டுப் புறப்படுகிறார்.
"ச்சே! எவ்ளோ ட்ரை பண்ணினாலும் இந்த ஹைக்கூ கவுஜை மட்டும் நமக்கு வரவே மாட்டேங்குதே" என்று ஒரு வலைப் பதிவர் தீவிர கவலையில் இருக்க அவரை நோக்கி வரும் அருள்குமார் "அண்ணே! இந்த புத்தகத்தை பாலா அண்ணன் உங்ககிட்டெ தரச் சொன்னார். இதைப் படிச்சிதான் அவரு கெட்டுப் போனாராம். ச்சே கவுஜை எழுத ஆரம்பிச்சாராம்"
"எல்லாருக்கும் இப்படி ஓடி ஓடி உதவி பண்ணுறாரே! பாலபாரதி இப்ப அவரு எங்கே இருக்காரு?" என்று கேட்க
"ம்! இன்னிக்கு என்ன சனிக்கிழமை சாயங்காலம்தானே! ஏதாவது ஒரு டாஸ்மாக்லே தம்மடிச்சிகிட்டு பின்நவீனத்துவ அரடை அடிச்சிகிட்டிருப்பாரு" என்கிறார்.
அப்படியே காட்சி கட் செய்யப் பட்டு ஏரியல் வியூவில் தி.நகரில் உள்ள ஈகிள் பாருக்குள் ஜூம் செய்யப் படுகிறது.
"சூப்பர் சூப்பர்"
என்று கூறிவிட்டு ஒரு பதிவரை கட்டித் தழுவி வரவெற்கும் பால பாரதி அப்படியே நம்மைப் பார்த்தும் "வாங்க தலைவா!" என்று வரவேற்கிறார்.
பின்னணி இசை அதிர பாடல் ஆரம்பமாகிறது.
"நான் மூத்த பதிவர் மூத்த பதிவர்.. நாலும் தெரிஞ்ச பிளாக்கர் பதிவர்! நியாயமுள்ள மொக்கைப் பதிவர்....காந்தி பிறந்த நாட்டுப் பதிவர்...
சொந்தத் தளத்தில் வோர்ட்பிரஸ் பதிவர்.. ரீசண்டா பெரியார் பதிவர்..
நான் எப்பொழுதும் நல்ல பதிவர்டா.. கலாய்க்க எப்பவுமே சூப்பர் பதிவர்டா...."
அடங்கொய்யாலேன்னா ங்கொய்யாலேதான்
கொய்யாலேன்னா ங்கொய்யாலேதான்
----------------------------------------------------------------------------------------
பால பாரதி : "என்னம்மா கவிதாயிணி கவலையா இருக்கே? உன்னைய வலைச் சரத்திலே சேர்த்துகிட்டாங்களா இல்லையா?"
கவிதாயிணி: "இல்லைங்க பாலாண்ணே! நமக்கு வலைச் சரமெல்லாம் சரிப் பட்டு வராது! நமக்கு வேண்டாம்னே!"
பால பாரதி: "உண்மையைச் சொல்லும்மா! என்ன ஆச்சு! "
கவிதாயிணி : "அண்ணே சொன்னாக் கேளுங்க! வலைச் சரம்லாம் எனக்கு வேண்டாம்!, கும்மிப் பதிவுகளாப் போட்டுத்தான் வலைச் சரத்துலே எழுதணும்னு நமக்கு ஒண்ணும் அவசியம் இல்லை"
பால பாரதி : "அப்படியா! இரு ஒரு நிமிஷம்!" என்று சொல்லிக் கொண்டே வலைச் சரம் ஆசிரியர் அறைக்குள் செல்கிறார்.
கண்ணாடி அறை வழியாக கவிதாயிணி உள்ளே பார்க்க வலைச் சரம் ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்கள் குழு விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்க பேந்தப் பேந்த விழித்தபடி அமைதியாக வெளியே வருகிறார் பாலபாரதி.
கவிதாயிணி : "அண்ணே என்னண்ணே சொன்னீங்க?"
பாலபாரதி : "உண்மையைச் சொன்னேன்.... !"
கவிதாயிணியை முன்னே அனுப்பி விட்டு தனியே சிந்தனையில் ஆழ்கிறார்.
"நான் சீரியஸ் பதிவர்"னு சொன்னவுடன் ஏன் எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்குறாங்க!"
------------------------------------------------------------------------------------------
குசும்பன் : "அண்ணே! ஒரு வழியா பதிவெழுதக் கத்துகிட்டு 3 பதிவு எழுதிட்டேன்! தமிழ் மணத்துலே சேர்த்துட வேண்டியதுதான்..!
பாலபாரதி : "சூப்பர்..சூப்பர் குசும்பா! சேர்த்துட வேண்டியதுதானே..."
குசும்பன் : "ஆனா அண்ணே! ரெஃபரன்ஸ் யாராவது இருக்காங்களான்னு கேட்டாங்க, நான் உங்க பேரைச் சொன்னேன். உங்களை ஒரு தபா தமிழ் மண ஆஃபீஸ்க்கு வரச் சொல்லி இருக்காங்க!
தமிழ்மண அலுவலகத்தில் பாலபாரதி நுழைந்ததும் நிர்வாகிகள் சட்டென எழுந்து நின்று பார்க்கின்றனர். பின்னர் அவரிடம் "இங்கே ஒரு கமெண்ட் போட்டுட்டுப் போங்க" என்று சொல்ல பாலபாரதி ஒரு பின்னூட்டம் இட்டுவிட்டு வருகிறார்.
இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அந்தப் பக்கத்திற்கு வந்த பாலபாரதி பின்னூட்டம் இடுகிறார்.
"அடங்கொய்யாலே! அடங்க மாட்டீங்களாய்யா நீங்க! இதெல்லாம் யாரு வேலைன்னு தெரியுமய்யா எனக்கு! ஒரே ஒரு கமெண்ட் போட்டதுக்கு இப்படியாய்யா கலாய்ச்சி ரெண்டடயிரத்துச் சொச்சம் கமெண்ட் போடுவீங்க"
-------------------------------------------------------------------------------------
தமிழோவியம் ஆசிரியர் : "இதோ பாருங்க பொன்ஸ், நீங்க இங்கே எழுதறதுலே ஒரு பிரச்சினையும் இல்லை! ஆனா பாலபாரதையை கலாய்க்காம எழுதணும். இதுதான் கண்டிஷன்! இதுக்கு ஒத்துகிட்டா நீங்ஜ தாராளமா இங்கே எழுதலாம்"
பாலபாரதி : "ஆமாம்மா பொன்ஸ்! என்னைக் கலாய்க்காம ஏதாச்சும் எழுதுங்க! (உங்களுக்குப் புண்ணியமாப் போகும்) தயவு செஞ்சி அவரு சொல்றதக் கேளு!"
பொன்ஸ்: "ஐயா! எங்க தல பாலபாரதியைக் கலாய்க்குறதை விட்டுட்டுத்தான் நான் இங்க எழுதணும்னா அந்த வாய்ப்பே எனக்கு வேண்டாம், பாலபாரதி நீங்க வாங்க போகலாம்"
பாலபாரதி : "சார், அவங்க ஏதோ புரியாம பேசுறாங்க! நல்லா சீரியஸா எழுதறவங்கதான். நான் சொல்லி புரிய வைக்கிறேன். நான் சொன்னா கேப்பங்க"
தமிழோவியம் ஆசிரியர் : "அட அட அட! பாலபாரதிய கலாய்க்குறதை விட்டுக் கொடுக்காத பொன்ஸ்! சக பதிவர் மேல அக்கறைபடுற பாலாபாய்!
யோவ் பால பாரதி! இதையெல்லாம் பார்த்து நான் பெருமைப் படுறேன்யா!
இன்னிலேர்ந்து நானும் பா.க.ச விலே சேர்ந்துக்குறேன்!
பொன்ஸ் : "ஹைய்யா! ஜாலி! பா.க.சவிலே இன்னொரு புது மெம்பர் கிடைச்சிட்டாரு!"
பாலபாரதி :" அடச் சே! :((((((((((((((((((((((("
த.ஆ: "தலை! அப்படியே ரத்தத்துலே பேர் எழுதின உறுப்பினர் அட்டையும், உறுப்பினர் சந்தா 5000ரூவாயும் கொடுத்துடுவீங்கள்ள?"
பாலபாரதி அங்கிருந்து எஸ்கேப் ஆகிறார்.
--------------------------------------------------------------------------------
இன்னும் வரும்! :)
இக்கலாய்ப்புக்கு தொடர்பான எதிர் கலாய்ப்புகள்