தமிழ்மண வாசகர்கள் என்ன இளிச்ச வாயர்களா?, பின்ன என்னங்க ஆளாளுக்கு ஒரு போஸ்ட் போடுவாங்களாம்! தமிழ்மணம், தமிழிஷ் னு இருக்குற எல்லா திரட்டியிலும் லிங்க் கொடுத்துடுவாங்களாம்/அனுப்பிடுவாங்களாம்! படிக்குறவங்க மாங்கு மாங்குன்னு பின்னூட்டம் போட்டுட்டு மறுக்கா ஓட்டு வேற குத்துவாங்களாம்!
சண்டை மட்டும் பப்ளிக்கா நடக்குமாம்! அப்பாலிககா இவங்களுக்குள்ளே தனிமடல்/தொலைபேசி ன்னு ரகசியமா பேச்சு வார்த்தை நடத்துவாங்கலாம்! அப்புறம் எல்லா போஸ்டையும் தூக்கிடுவாங்களாம்!
இல்லை தெரியாமத்தான் கேக்குறேன்! படிக்குறவங்க என்ன வேலை வெட்டி இல்லாம காது குடைஞ்சிகிட்டு உக்காந்து இருக்கோம்னு நினைச்சிகிட்டிருக்கீங்களா! எங்களுக்கு ஆயிரத்தெட்டு மொக்கை வேலையெல்லாம் விட்டுபுட்டு அங்கயும், இங்கயுமா லிங்கை தேடி தேடி படிச்சி பின்னூட்டம் போட்டுகிட்டு அதுக்கெல்லாம் என்ன பதில் வந்துதுன்னு படிக்க காத்துகிட்டிருப்போம்!
ஒரே நிமிஷத்துல எல்லா போஸ்டையும் தூக்கிடுவீங்க! சரி தூக்குறதுதான் தூக்குறீங்க! தமிழ்மணத்துக்கு ஒரு மெயில் அனுப்பி அங்க லிஸ்ட் பண்ணுறதையும் தூக்கச் சொல்லலாம்ல! அவங்கவங்க பிளாக்லலருந்து தூக்கிட்டா போதுமா?
அட்லீஸ்ட்! இந்த பதிவு ஒருவேளை நீக்கம் செய்யப்படவும் வாய்ப்பிருக்கிறதுன்னு ஒரு பின் குறிப்பாவது போடலாம்! மண்ணைய பிச்சிகிட்டு பின்னூட்டம் போடுறவங்களாவது எப்படியாச்சும் தூக்கத்தான போறாங்க! எதுக்கு மெனக்கெட்டு புன்னூட்டம்லாம் போட்டுகிட்டுன்னு பேசாமயாவது இருப்பாங்கல்ல!
நீக்குன பதிவுகளை திரட்டிகளும் தொடர்ந்து பட்டியல்ல காட்டிகிட்டு இருக்கு! புதுசா வரவங்களும் அதை கிளிக் பண்ணி பார்த்தா அங்க அந்த பதிவே இல்லைன்னு எரர் மெசேஜ் வேற வரும்! இப்படியே தினமும் ரெண்டு போஸ்ட் பார்த்தா படிக்கிறவங்களுக்கு தமிழ்மணத்துல எதை கிளிக் பண்ணினா கண்டிப்பா நீக்கப்படாத போஸ்ட் இருக்கும்னு குழப்பம் வராது? இதன்மூலமா திரட்டிகள் மேல இருக்குற நம்பகத்தன்மைக்கும் ஆப்பு வெச்ச மாதிரில்ல ஆகுது?
இப்ப சீரியஸ்(!?) மெசேஜ்
போட்ட அரை மணி நேரத்துல நீக்கிடலாம்னு தோணுதே! அந்த பாழாப்போன போஸ்டை பப்ளிஷ் பண்ணுறதுக்கு முன்னாடி ஒரு அஞ்சு நிமிஷம் யோசிக்கலாம்ல! அட! அந்த பதிவுல போடுற விஷயத்தை சம்மந்தப்பட்ட ஆளுங்களுக்கு மட்டும் தனிமடல் அனுப்பி சண்டையெல்லாம் போட்டு கடைசியில சுமுகமா முடிச்சிக்கலாம்ல!
பப்ளிக்கா பல பதிவுகளை போட்டு ஏன் எல்லாரையும் எரிச்சலூட்டுறீங்க! அல்லது திரட்டிகளுக்காவது அனுப்பாம இருங்க! புண்ணியமா போகும்!
பல்வேறு ஊடகங்கள் இப்பதான் தமிழ் வலைப்பதிவுகளை தொடர்ந்து பார்த்துகிட்டு இருக்காங்க! அவங்க முன்னாடி நம்மை நாமே தரம் தாழ்த்திக்கலாமா? கொஞ்சம் யோசிச்சி சொல்லுங்க!
பின்குறிப்பு:
இந்த பதிவை எக்காரணம் கொண்டும் நீக்க மாட்டேன் என்ற உறுதிமொழியுடன் தமிழ்மணம் கருவிப்பட்டையிலிருக்கும் அனுப்பு பொத்தானை அழுத்துகிறேன்!
மும்பையிலிருந்து திரும்பி வரும் இளைஞன்/குழந்தை பாலபாரதி! 20 வருடத்தைக் குறைத்து இளமையாகக் காட்ட படாத பாடு பட்டு ஒப்பனையின் மூலம் 40 வயது இளைஞராக்கி இருக்கிறார்கள்.
இவர் சென்னை வந்தவுடன் தானும் கொலைப் பதிவர் சந்திப்புகளை திட்டமிட்டு பக்காவாக நடத்த வேண்டும். அதில் பிளாக்கர்கள், அதர் ஆப்ஷன்கள், அனானிகள் அனைவரும் பாகுபாடின்றி கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்கிறார். ஆனால் ஏற்கனவே இதைத் தொழிலாகச் செய்துவரும் பிரபலமானவருடன் இவருக்கு மோதல் ஏற்படுகிறது. பின்னர் சோதனைகளைக் கடந்து எப்படி இவர் கொலைப் பதிவர் சந்திப்புகளை வெற்றிகரமாக நடத்துகிறார் என்பது கிளைமாக்ஸ்.
பால பாரதி : "அடப் பாவிகளா, அங்கயுமாடா! :( " ------------------------------------------------------------------------------ பால பாரதி : " என் லேப் டாப்புலயும் லினக்ஸ் சுசீ இன்ஸ்டால் பண்ணிக் குடுங்க"
மா.சிவகுமார் : "முன்ன பின்ன தெரியாத ஆளுகளுக்கெல்லாம் இன்ஸ்டால் பண்னிக் குடுக்க முடியாது"
பால பாரதி : "முன்ன பின்னதான இப்போ பார்த்துக்குங்க"
பால பாரதியும், வரவணணயானும் டக் டக் என்று முன் பின்னாகத் திரும்பி
"இது முன்ன, இது பின்னே" என்று கோரஸாகச் சொல்கின்றனர்.
மா.சிவகுமார் தலையில் அடித்துக் கொள்கிறார். ------------------------------------------------------------------------------ அருள் குமார் : "அட! சுசீ இல்லாட்டி என்னங்க பால பாரதி? என்கிட்ட ரெண்டு ஓ.எஸ் இருக்கு ஒண்ணு உபுண்டு, இன்னொன்னு தபுண்டு, உங்க லேப்டாப்ல இன்ஸ்டால் பண்ணி நல்லா பழகிப் பாருங்க, பிடிச்சா அதையே யூஸ் பண்ணுங்க, இல்லாட்டி விண்டோஸ் 2000 போட்டுடலாம்" ----------------------------------------------------------------------------- டோண்டு : "யேய் யேய்... இவன் பால பாரதியேதான்.. எப்படி எப்படி....? "
சிபி : " சார்.. என்ன சார் இது! பாலபாரதியைத்தான் நாம கொன்னுட்டமே! இவன் வேற ஆளு சார், பால பாரதி பிரண்டாம்"
பி.பி.ரதி : "என் பேரு பி.பி.ரதி, சும்மா பேரைக் கேட்டாலே அதிருதில்ல" -------------------------------------------------------------------------- மா.சிவகுமார் : "பழக்கம் ஆகணுங்குறதுக்காக தெனமும் பொழுது போயி பொழுது விடிஞ்சா எங்க ஆஃபீஸ் வாசல்ல வந்து நிக்குறது கொஞ்சம் கூட நல்லா இல்லை! சொல்லிட்டேன்!" ---------------------------------------------------------------------------- பால பாரதி : "தோ பாருங்க, போண்டா இல்லாம மீட்டிங்குக்கு வர விருப்பம் இருக்குவங்க எல்லாம் இப்படி வாங்க, மீதி பேரெல்லாம் அதோ அங்கன இருக்குற ஆஃபீஸ் ரூமுல போய் வெயிட் பண்ணுங்க"
உடனே பாலபாரதி கண் சிமிட்டும் நேரத்தில் அங்கிருந்த அனைவரும் காணாமல் போய்விடுகின்றனர்.
வரவணையான் : "தலை! எக்குத் தப்பா இப்படியெல்லாம் சொல்லாதீங்க. இப்ப பாருங்க! எல்லாரும் அந்த ஆஃபீஸ் ரூமுலதான் போண்டா தருவாங்கன்னு பறந்துட்டாங்க! இப்போ அவ்ளோ போண்டாவுக்கு என்ன பண்ணப் போறீங்க? இல்லாட்டி உங்களை குமுறீடப் போறாங்க" ----------------------------------------------------------------------------- ஆர்.எஸ்.புரம், கோயமுத்தூர், கோவை மாவட்டம்
ஓசை செல்லா : "பால பாரதி, இது உங்க ஊரு மாதிரி, நீங்க எப்படி எப்படி மீட்டிங் நடத்தணும்னு ஆசைப் படுறீங்களோ, அப்படியேல்லாம் நடத்துங்க. " (யப்பா, இப்படியா ஆப்பு வெப்பாங்க.. அடி பின்னீட்டானுவலே") ----------------------------------------------------------------------------- வீ.த.பீப்பிள் ஜெய்: தோ பாருங்க சி.பி.ஐ ஆபீசர். நாங்க இனிமே அவரை கலாய்க்க முடியாம போயிடும்ணு சொன்னதாலதான் நான் அவரோட பிளாக் யூரலை உங்ககிட்டே தரேன். எக்காரனம் கொண்டும் நாங்க அவரைக் கலாக்குறதுக்கு ஆபத்து வந்துடக் கூடாது. அதுக்கு முதல்ல சத்தியம் பண்ணிக் குடுங்க. --------------------------------------------------------------------------------- சி.பி.ஐ ஆபீசர்: "எப்படிய்யா பாலபாரதியோட பிளாக்கை ஓப்பன் பண்ணுறது. பாஸ்வோர்ட் தெரியனுமே"
உதவி ஆபீசர் : "அட பாஸ்வோர்ட் தெரியணும் அவ்வளவுதானே! இப்ப பாருங்க" என்று சொல்லிவிட்டு தனது மொபைல் ஃபோனை எடுத்து பாலபாரதியின் நம்பரை டயல் செய்கிறார் .
உதவி ஆபீசர் : "ஹலோ பாரதிங்களா, வணக்கம் தலை"
பால பாரதி : "வணக்கம். வணக்கம் தலை. சொல்லுங்க யாரு பேசுறது"
உதவி ஆபீசர் : "நான் ஒரு புது பிளாக்கர் தலை. பிளாக்ல ஒரு சந்தேகம். எல்லாரும் உங்ககிட்ட கேட்டா உதவி பண்ணுவீங்கன்னு சொன்னாங்க. அதான் உங்களுக்கு அடிச்சேன்"
பால பாரதி : "சந்தேகமா, ரொம்ப சந்தோஷம். எது வேணும்னாலும் கேளுங்க, நம்மால முடிஞ்சத சொல்றேன் தல"
உதவி ஆபீசர் : "அது ஒண்ணும் இல்ல தலை, ஹெச்.டி.எம்.எல்ல கொஞ்சம் டவுட்டு, உங்க பிளாக் டெம்பிளேட் ஓப்பண் பண்ணி பார்த்து, அதுல லிங்க் எப்படி கொடுக்குறதுன்னு பார்த்து தெரிஞ்சிக்கிட்டேன்னா அவ்வளவுதான். உங்க பிளாக் பாஸ்வோர்ட் கொஞ்சம் சொல்லுங்க தலை"
இந்த வருஷம் ஆரம்பிச்சதிலேர்ந்தே ஒரே போட்டி மயமா இருக்கு! தினம் தினம் தமிழ்மணத்தைத் திறந்தா போட்டி என்ற வார்த்தை முகப்புப் பக்கத்துல ஒரு இடத்துலயாவது இல்லாம இருக்கிறதே இல்லை! அந்த அளவுக்குப் போட்டிகள்!
போட்டிக்கு எழுதுற கதைகளைப் படிச்சி முடிக்கவே நமக்கு தாவு தீருது! இதுல நாம வேற எந்தப் போட்டில கலந்துக்குறது, எதை விடுறது தவிச்சிப் போயி கிடக்குற என்னை மாதிரி சுறுசுறுப்பான(!?) பதிவர்களுக்காக (மட்டுமே) இந்த சிறப்புப் போட்டி!
உங்க மூளையைக் கசக்க வேண்டாம், ரூம் போட்டு யோசிக்க வேண்டாம். இந்த போட்டியின் ஸ்பெஷாலிட்டியே ரொம்ப சிம்பிளா எண்ட்ரி கொடுக்க வேண்டியதுதான்! நடுவர்களுக்கும் அத்தனை கஷ்டமான வேலை இல்லை! படிச்சி விமர்சனமெல்லாம் எழுதி, திருத்தி மார்க் போட்ட வேண்டியதில்லை! (பாவம்! நீங்களும் எத்தனை கதைதான் படிச்சி தாவு தீருவீங்க...)
இந்த போட்டியைப் பத்தி:
ஒண்னுமில்லைங்க! இந்தப் போட்டியில கலந்துக்காம இருக்கணும்! அதான் போட்டியே!
(ஐயா திரட்டிகளே, போட்டி நடத்தும் நிர்வாகிகளே...! ஐபிஎல், ஐசிசி, டெஸ்ட் மேட்ச், ஒன் டே, 20/20 எல்லாம் ஒரே நேரத்துல வெச்சா எப்படி பிளேயர்ஸ் களைச்சி போயிடுவாங்களோ அதே மாதிரி
எக்கச் சக்க போட்டிகள்(குறிப்பா சிறுகதைகளுக்கு மட்டுமே நிறைய), அதுவுமிலலாம ஏகப்பட்ட தொடர்கள்(டெஸ்ட் மேட்ச்)?
"அட என்னங்க இது! ஒரு மணி நேரத்துல 10 போஸ்ட் எழுதித் தந்துடுவேன்னு சொன்னீங்க! இன்னமும் ஆரம்பிக்கவே இல்லை! விடுங்க நான் வேற யார்கிட்டயாவது கொடுத்து எழுதிக்கிறேன்!"
"சார்! ப்ளீஸ் ஒரு அஞ்சு நிமிஷம் பொறுங்க! ஃபாண்ட் பிராப்ளம்தான்! சரி ஆனதும் எப்படியாவது முடிச்சி கொடுத்துடுறேன்" என்று சமாதானப் படுத்தி விட்டு கைகளைப் பிசைந்து கொள்கிறார்.
அப்போது அவரை நோக்கி மூச்சிரைக்க ஓடிவரும் வீதபீப்பிள் ஜெய்!
அந்தப் பதிவரோ ரொம்பவும் நெகிழ்ந்து போய் "அண்ணே! நல்ல நேரத்துல வந்தீங்க! எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை" என்று தழுதழுக்கிறார்.
"அட! நன்றியெல்லாம் எனக்கெதுக்கு! எல்லாம் பாலபாரதி அண்ணனுக்கு சொல்லுங்க அப்படியே மறக்காம பா.க.ச போஸ்ட் ரெண்டு எழுதிடுங்க" என்று கூறி விட்டுப் புறப்படுகிறார்.
"ச்சே! எவ்ளோ ட்ரை பண்ணினாலும் இந்த ஹைக்கூ கவுஜை மட்டும் நமக்கு வரவே மாட்டேங்குதே" என்று ஒரு வலைப் பதிவர் தீவிர கவலையில் இருக்க அவரை நோக்கி வரும் அருள்குமார் "அண்ணே! இந்த புத்தகத்தை பாலா அண்ணன் உங்ககிட்டெ தரச் சொன்னார். இதைப் படிச்சிதான் அவரு கெட்டுப் போனாராம். ச்சே கவுஜை எழுத ஆரம்பிச்சாராம்"
"எல்லாருக்கும் இப்படி ஓடி ஓடி உதவி பண்ணுறாரே! பாலபாரதி இப்ப அவரு எங்கே இருக்காரு?" என்று கேட்க
"ம்! இன்னிக்கு என்ன சனிக்கிழமை சாயங்காலம்தானே! ஏதாவது ஒரு டாஸ்மாக்லே தம்மடிச்சிகிட்டு பின்நவீனத்துவ அரடை அடிச்சிகிட்டிருப்பாரு" என்கிறார்.
அப்படியே காட்சி கட் செய்யப் பட்டு ஏரியல் வியூவில் தி.நகரில் உள்ள ஈகிள் பாருக்குள் ஜூம் செய்யப் படுகிறது.
"சூப்பர் சூப்பர்"
என்று கூறிவிட்டு ஒரு பதிவரை கட்டித் தழுவி வரவெற்கும் பால பாரதி அப்படியே நம்மைப் பார்த்தும் "வாங்க தலைவா!" என்று வரவேற்கிறார்.
பின்னணி இசை அதிர பாடல் ஆரம்பமாகிறது.
"நான் மூத்த பதிவர் மூத்த பதிவர்.. நாலும் தெரிஞ்ச பிளாக்கர் பதிவர்! நியாயமுள்ள மொக்கைப் பதிவர்....காந்தி பிறந்த நாட்டுப் பதிவர்...
சொந்தத் தளத்தில் வோர்ட்பிரஸ் பதிவர்.. ரீசண்டா பெரியார் பதிவர்..
நான் எப்பொழுதும் நல்ல பதிவர்டா.. கலாய்க்க எப்பவுமே சூப்பர் பதிவர்டா...."
கவிதாயிணி: "இல்லைங்க பாலாண்ணே! நமக்கு வலைச் சரமெல்லாம் சரிப் பட்டு வராது! நமக்கு வேண்டாம்னே!"
பால பாரதி: "உண்மையைச் சொல்லும்மா! என்ன ஆச்சு! "
கவிதாயிணி : "அண்ணே சொன்னாக் கேளுங்க! வலைச் சரம்லாம் எனக்கு வேண்டாம்!, கும்மிப் பதிவுகளாப் போட்டுத்தான் வலைச் சரத்துலே எழுதணும்னு நமக்கு ஒண்ணும் அவசியம் இல்லை"
பால பாரதி : "அப்படியா! இரு ஒரு நிமிஷம்!" என்று சொல்லிக் கொண்டே வலைச் சரம் ஆசிரியர் அறைக்குள் செல்கிறார்.
கண்ணாடி அறை வழியாக கவிதாயிணி உள்ளே பார்க்க வலைச் சரம் ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்கள் குழு விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்க பேந்தப் பேந்த விழித்தபடி அமைதியாக வெளியே வருகிறார் பாலபாரதி.
கவிதாயிணி : "அண்ணே என்னண்ணே சொன்னீங்க?"
பாலபாரதி : "உண்மையைச் சொன்னேன்.... !"
கவிதாயிணியை முன்னே அனுப்பி விட்டு தனியே சிந்தனையில் ஆழ்கிறார்.
"நான் சீரியஸ் பதிவர்"னு சொன்னவுடன் ஏன் எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்குறாங்க!"
குசும்பன் : "ஆனா அண்ணே! ரெஃபரன்ஸ் யாராவது இருக்காங்களான்னு கேட்டாங்க, நான் உங்க பேரைச் சொன்னேன். உங்களை ஒரு தபா தமிழ் மண ஆஃபீஸ்க்கு வரச் சொல்லி இருக்காங்க!
தமிழ்மண அலுவலகத்தில் பாலபாரதி நுழைந்ததும் நிர்வாகிகள் சட்டென எழுந்து நின்று பார்க்கின்றனர். பின்னர் அவரிடம் "இங்கே ஒரு கமெண்ட் போட்டுட்டுப் போங்க" என்று சொல்ல பாலபாரதி ஒரு பின்னூட்டம் இட்டுவிட்டு வருகிறார்.
இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அந்தப் பக்கத்திற்கு வந்த பாலபாரதி பின்னூட்டம் இடுகிறார்.
"அடங்கொய்யாலே! அடங்க மாட்டீங்களாய்யா நீங்க! இதெல்லாம் யாரு வேலைன்னு தெரியுமய்யா எனக்கு! ஒரே ஒரு கமெண்ட் போட்டதுக்கு இப்படியாய்யா கலாய்ச்சி ரெண்டடயிரத்துச் சொச்சம் கமெண்ட் போடுவீங்க"
தமிழோவியம் ஆசிரியர் : "இதோ பாருங்க பொன்ஸ், நீங்க இங்கே எழுதறதுலே ஒரு பிரச்சினையும் இல்லை! ஆனா பாலபாரதையை கலாய்க்காம எழுதணும். இதுதான் கண்டிஷன்! இதுக்கு ஒத்துகிட்டா நீங்ஜ தாராளமா இங்கே எழுதலாம்"