அன்புத் தம்பி(வலைப் பதிவர் தம்பி அல்ல)!
முதல் முறையாக சங்கத் தளபதி என்ற முறையில் இக் கடிதத்தை எழுதுகிறேன்.
ஆனால் ஐயஹோ! துரதிஷ்டவசமாக இதுவே கடைசி கடிதமாகவும் அமைகிறது.
கொஞ்சம் சிந்தித்துப் பார்!
கைகளுக்கு விலங்கிட்டு விட்டு கைமுறுக்கு சுற்ற அழைத்தால் இயலுமா?
நகைச் சுவைதான் நோக்கமெனச் சொல்லி கும்மி கூடாதென்றால் ஆகுமா?
என்னை நம்பியிருக்கும் எண்ணற்ற அனானிகளுக்கு நான் செய்யும் கைம்மாறு என்ன?
சுதந்திரம் இல்லையென்றால் சுவர்க்கம் என்றாலும் நாம் விரும்ப மாட்டோம் என்பதை இந்த நாடறியும்!
கை விலங்குகளுக்குள் கட்டுண்டுதான் இங்கு பணியாற்ற வேண்டிய பாக்கியம் உண்டு என்றால் நமக்கு அந்த பாக்கியம் அவசியம்தானா?
நாம் சுதந்திரப் பறவைகள்! நமக்கு வானம்தான் எல்லை!
ஆழ்ந்து சிந்தித்தே இந்த முடிவெடுத்திருக்கிறேன்! ஆதரவு அளிப்பாய் என்ற நம்பிக்கையுடன்!
இனி விலங்குகள் உடைந்தன! கட்டுப் பாடுகள் களைந்தன!
சிறகு விரித்துப் பறக்க இருக்கிறேன்!
விடை கொடு தம்பி! விடை கொடு!
இதோ இன்று முதல் கும்மியடிப்போர் முன்னேற்றக் கழகம் என்ற மூன்றாவது அணியை நிறுவி இருக்கிறோம் தம்பி! உன்னை நம்பி!
எங்களது நோக்கம் சிரிப்பும், சுதந்திரமும்